படம் பார்த்து கவி: இரவெல்லாம் கண்விழித்து

by admin
117 views

இரவெல்லாம் கண்விழித்து உழைத்த உழைப்பால் வியர்வை உதிக்கிறாளோ பச்சையம்மாள்

காற்றில் கலந்த கரிமிலவாயூ எல்லாம் தன்னுள் வாங்கி சுத்தமான பிராணவாயுவை பூமிப்பந்தில் பிச்சை போட்டாள்  பச்சையம்மாள் 

காலையில் கண்விழிக்கும் மனித பயலுக கை விரலுக்கு நடுவே வைத்து குபுக்கு குபுக்கு என வெளியே விடுகிறான் சிகிரெட் புகையை.

இரவெல்லாம் உழைத்த உழைப்பு விரயமாய் போனதே என வருந்துவதில்லை பச்சையம்மாள்.

மறுநாள் இரவில் மனவருத்தம் இல்லாமல் மீண்டும் உழைக்கிறாள் பச்சையம்மாள்.
– வர்மா –

You may also like

Leave a Comment

error: Content is protected !!