படம் பார்த்து கவி: ஊசி

by admin 3
6 views

ஊசி நூல் உளி கொண்டு அருவத்தை உருவமாக்கும்
ஆர்பாட்ட சிற்பி
வற்றா தொழிலின்
வளமை மூலம்
வாழ வைப்போதோ
ஊரில் ஏராளம்
முடக்கப்பட்டு அடக்கப்பட்ட சிறகுகளின் சீரிய வானம்
சிந்தையால் விந்தை செய்யும் கலைஞனின் அடையாள ஆயுதம்
இடையறாத இசையால் தடையறாத ஒளி தந்து
தரணியில் சுவடு தரும்
தன்னம்பிக்கைச் சுடர்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!