படம் பார்த்து கவி: கண்ணாடி

by admin 3
24 views

கண்ணாடி குப்பியும் காயம் கொண்டதோ
கல்லடி பட்டதோ கண்ணடி பட்டதோ
சில்லுகளாய் சிதறி சிந்துகிறதே குருதி
எல்லையிலா வலிய வலி கொண்டதுவோ
தொல்லை அதற்கும் தந்தது யாரோ
எல்லையில்லா எல்லா நோவும் யாரளித்திருந்தாலும்
எல்லோரறிய உடைந்தே உதிரம் உகுக்காதே
வல்லாரையும் வென்றே பொல்லாரையும் பொசுக்க
வலுவடைந்தே பழுது பார்த்திடில் புத்துருவேற்றிடலாமே
வலிமையது உடையக் காரணம் ஆனோரும்
வலு கண்டு உடைந்தே காணாதொழியட்டுமே…

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!