படம் பார்த்து கவி: கருணை

by admin 3
0 views

கருணை கடலில் மிதக்கும் நம்பிக்கை கப்பல்,
உயிர் காக்கும் பயணம், அன்பின் அலைகள்!
கடலின் அலைகள் தாலாட்ட,
நம்பிக்கைக் கலங்கரை விளக்கமாய்
புயலைத் தாங்கும் உறுதி கொண்டு,
மருத்துவக் கரங்கள் நீள..
வாழ்க்கைப் படகுகள் தவிக்கும் இடமெல்லாம்,
கண்களில் ஒளி ஏற்ற, இருள் விலக்க..
புன்னகை பூக்க வைக்கும் சேவை,
காயங்கள் ஆற்றி, கனவுகள் மீட்கும்.
மனித நேயம் மிதக்கும் இந்தக் கப்பல்,
இதயங்களை இணைக்கும் பாலம்.

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!