கருப்பு பலகை மீது வண்ண வண்ண சுண்ணாம்பு கட்டிகள்…
வானவில்லின் வண்ணத்தில் அழகாய் மின்னும் காட்சி…
ஒவ்வொரு நிறமும் ஒரு கதை சொல்ல…
அறிவின் பாதையில் வழி காட்ட வந்தன…
கணக்கின் மாயத்தை கணிக்க…
எழுத்தின் அழகை எடுத்துரைக்க…
ஓவியத்தில் வண்ணங்களாய் நிரம்ப…
விரல்கள் நுனியில் கலை படைக்கும்…
தான் தேய்து பிறர் அறிவை வளர்க்கும்…
சிறு துண்டும் சிந்தனையை தூண்டும்…
குழந்தைகள் கையில் புத்துணர்வு பெறும்…
ஆசிரியரின் கையில் அறிவின் ஆயுதம்…
கரும்பலகையில் புது உலகம் பிறக்கும்…
வண்ணங்களின் மின்னும் சுண்ணாம்பு கட்டி.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: கருப்பு
previous post