படம் பார்த்து கவி: கோழியினிலே

by admin 3
1 views

கோழியினிலே செய்த கவளம்,
பொன்னிறமாய் பொரித்த பதம்.
பார்க்கப் பார்க்க பசி தூண்டும்,
சுவைக்க சுவைக்க நாவு கூடும்.
மொறுமொறுப்பாய் மேனியுண்டு,
மிருதுவான உள்ளமுண்டு.
சாஸோடு தொட்டுண்ண,
இன்பமாய் வயிறு நிறைய.
சிறுவர் முதல் பெரியோர் வரை,
விரும்பி உண்ணும் நொறுக்குத்தீனி.
நண்பர்களோடு பகிரலாம்,
தனியாய் அமர்ந்து ரசிக்கலாம்.
கோழிவறுவல், ஹாப்பி மீல்,
நாவில் என்றும் நிற்கும் சுவை.
உண்டோர்க்கு ஆனந்தம்,
பார்த்தோர்க்கு பசியின் பிடி.

இ.டி. ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!