சின்னப் பாப்பா பசி தீர்க்கும்,
வெள்ளைப் பாட்டில் பால் சுமக்கும்.
அம்மா அன்பு நிறைந்து வழியும்,
ஆரோக்கியமாய் குழந்தை வளரும்.
குட்டி வாயில் நுழைந்து மகிழும்,
சக்தி தந்து தூங்க வைக்கும்.
இளமைக்கால அமுத சுரபி,
இதன் துணைகொண்டு வளரும் புது உலகம்.
தாய்ப்பால் அமுதம், தலைசிறந்த உணவே,
குழந்தை நலனுக்கு அதுவே உறுதுணை.
ஆயினும் சிலநேரம், ஆபத்துக் காலங்கள்,
அவசரத் துணைக்கு வரும் இப் பாட்டிலே.
அன்னை மடியில் பால் சுரக்காத போதும்,
அல்லது தாய்க்கு முடியா நிலையிலும்,
பசி தீர்க்கும் பக்குவமாய் இப் புட்டி,
இழப்பை ஈடு செய்யும் ஒரு தற்காலிகக் குடி
இ.டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: சின்னப்
previous post