செயற்கை நீரூற்று
அழகிய நீருற்றாய்த் தோற்றம் இருப்பினும்
சில சாயல்கள் செயற்கை உருவிலும்
நிஜம் போல் அச்சுறுத்தும் தன்மையவை
நீல வண்ணம் கொண்டு பாம்பு
வடிவில் அமையப் பெற்ற செயற்கை
நீருற்று.. ஒரு வேளை விஷம்
கக்கும் பாம்பை நினைவில் கொணர்கிறதோ?
விஷம் நீக்க பாம்பின் பற்கள்
பிடுங்கப்படுமாம் .. அப்படியாயின் வார்த்தைகளில் கொடிய
விஷம் கக்கும் பாவி மனிதனவன்
பற்கள் பிடுங்குவார் யாரோ சொல்வீர்!
நாபா.மீரா