தியாகம் செய்வதில் மெழுகும் பெண்ணும்
ஒன்றோ?
நெருப்பில் உருகி தன்னுயிர் ஈந்திடும்
மெழுகு
உயிர்தனைச் சுமப்பது தொடங்கி உருக்கும்
அன்பினைப்
பாலொடு ஊட்டிடும் தாயாய் தாதியாய்
யாதுமாகி
நின்றிடும் பெண்மை மென்மையே உருவாய்…
இருட்டறையாம்
கருவறையில் ஈரைந்து மாதங்கள் தாங்கிப்பின் அறை
திறந்தே புது உலகிற்கு வழிகாட்டிடுவாள்
உயிருக்கே..
நெருப்பை மெதுவாய் உண்டே ஒளியாய்ப்
பிரசவிக்கும்
மெழுகும் ,பெண்ணும் தியாகச் சுடர்களே
மொத்தத்தில்
நம் வாழ்வின் இருள் போக்கும் அன்புத்
தெய்வங்கள்….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: தியாகம்
previous post