நானும், அவனும்
பாதை விளங்காப் பயணம்… நடந்து,
ஓடி சலித்தே நள்ளிரவில் பாதையோரமாய்
ஓய்வாய் அவனும் நானும் வீதியில் …
களைப்பில் அயர்ந்தோம் .. அந்தகாரத்தில் ஓர்
ஏகாந்தம் மடியில் கனமும் வழியில்
பயமும் இன்றியே தெவிட்டத் தெவிட்ட
சுகானுபவம் கண்ட இன்ப நொடிகள்
உனக்கு நான் எனக்கு நீ
சொல்லாமல் சொல்லிய அற்புதத் தருணங்கள்
வீடு துறந்து வீதியில் தஞ்சமடைந்த
விசுவாச நாயும், பாசக்கார எசமானனும்…..
நாபா.மீரா
படம் பார்த்து கவி: நானும்
previous post