படம் பார்த்து கவி: பாம்பு

by admin 3
14 views

பாம்புத் தொட்டி பாலாக்கள் உலகம்,
வண்ணத் தலையில் வருது நீரு!
சின்னக் கைகள் தொட்டு மகிழும்,
சிரிப்பில் மிதக்கும் குழந்தை யாரு!
வடிவம் பார்த்து பயப்பட மாட்டார்,
விளையாட்டே அவங்க எண்ணம்!
நீரில் குளித்து களிப்படைவார்,
வடிவம் பார்த்து அஞ்சாத சிசுக்கள்…நாளை
அவனிக்கு அவர்களே
புரட்சி வித்துக்கள் ..
புது உலகமே அவங்க கண்ணம்!

இ .டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!