படம் பார்த்து கவி: பாறையின்

by admin 3
13 views

பாறையின் மடியில் ஓர் நீலக் கோளம்,
சுற்றும் நீரின் அழகில் கொள்ளைப்பொலிவு.
அமைதியின் உருவாய், இயற்கையின் ஓவியமாய்,
சுழலும் பூமி, கண்கொள்ளாக் காட்சி!
வான் நீலமும், கடல் நீலமும் ஒன்றாய் கலந்து,
பாறையின் சாம்பல் நிறம் தனித்து நிற்க.
காலத்தின் சுழற்சியில் காட்சியிது தோன்றி,
மனதை மயக்கும் பேரழகு கண்டேன்!

இ.டி.ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!