மௌனமான இரவின் மேடையில்
மின்னும் ஒளிக்கதிரகளாய்
நிலாவோடு பேசும்
நட்சத்திரத் தோழிகள்
விண்மீன்கள்
வானத்தின் பார்வைக்குள் மெல்ல மறைந்து
அழிந்துபோகும்
அந்தரங்கக் கனவுகள்
ஒளிக்கீற்றுகளாய்
வாழ்க்கை வழியெல்லாம்…
விட்டுச் சென்ற கனவுகள்
கண்ணீரின் பிணைப்பு
புன்னகையின் ஒளித் துடிப்பு
கைக் கொள்ள முடியாதது
நெஞ்சில் பதிய முடியாதது
ஆனாலும் …
மனதின் ஆழத்தில்
தீண்டும் நினைவுகள்
விண்மீன்கள் …
வெறும் ஒளி மட்டுமல்ல
மூடிய விழிகளின் இசை உள்ளத்தைப் பாசத்தால் நிரப்பும்
மௌனமாகக் கதை பேசும்
இயற்கைக் கவிப் புள்ளிகள்
நா.பத்மாவதி
படம் பார்த்து கவி: மௌனமான
previous post