படம் பார்த்து கவி: வார்த்தை

by admin 1
110 views

வார்த்தை எனும் வாளாலே
வடுவான வாழ்க்கை
பிளவு பட்ட தக்காளியாய்
இரண்டு பட்டு போகும்

சினம் சிகரம் தொட
வாய் வந்த வார்த்தை
இருமுனை கத்தியாய் பாயும்

மௌனம் எனும் மருந்தாலே
சினம் எனும் கத்தியின்
கூர் மழுங்கி போகும்

வார்த்தைக்கு உயிர் மாய்க்கும்
வழு உண்டு என்றால்
வாய் தானே வாளை விட
கூர்மையாய் இருக்கும்
சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!