வாழ்வை மறிக்கும் சாதியம் ஒழிப்போம்
செயற்கை நுண்ணறிவு கோலோச்சும் காலம்
இயற்கை காதலை எதிர்க்கும் கோலம்
பரணில் நீதி இலக்கியம் யாவும்
முரணில் மானுடம் தகிக்கும் வன்மம்
சாதிய கோரப் பற்கள் கடித்து
தீதுகள் புரிந்து ரத்தம் குடிக்கும்
ஆணவக் கொலைகளைத் தடுக்கச் சட்டம்
அரசு கொண்டுவர வேண்டிய திட்டம்
“சாதிகள் இல்லையடி பாப்பா” பாடிய
சோதிமிகு பாரதி வழியில் வாழ்வோம்
வாழ்வை மறிக்கும் சாதியம் ஒழிப்போம்
வாழ்வு செழிக்க மனிதம் வளர்ப்போம்
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: வாழ்வை
previous post