வெள்ளை நிற முத்துக்களாய்,
அடுப்படியில் ஆவியாகி,
பசி தீர்க்கும் உணவாகி,
தட்டில் தவழ்ந்து வரும் சோறு.
ஒவ்வொரு தானியத்திலும்,
உழைப்பின் வியர்வை துளிகள்,
அன்னையின் பாசக் கரங்கள்,
அன்றாட வாழ்வில் அமுதம்.
நன்றி சொல்வோம் மண்ணுக்கும்,
விவசாயியின் உழைப்பிற்கும்,
பசியாற்றும் இந்த சோற்றுக்கும்,
வாழ்வின் ஆதாரம் இதுவே.!
இ.டி. ஹேமமாலினி
படம் பார்த்து கவி: வெள்ளை
previous post