படம் பார்த்து கவி:உள்ளே

by admin 3
7 views

உள்ளே நுழைய, கதவுகள் விரியும்,
மாடிக்கு மாடி இலகுவாய் ஏறும்.
பொத்தானை அழுத்த, இயக்கம் தொடங்கும்,
உயரப் பறக்கும் உணர்வை அது தரும்.
சிறு அசைவில், மேலேறிச் செல்லும்,
பாரமில்லாமல், பயணம் சுகம் கொள்ளும்.
காலத்தின் அருமை காக்கும் இயந்திரம்,
மின் தூக்கி, மாந்தரின் வரம்.
முதியோர் முதல் சின்னக் குழந்தை வரை,
சிரமமின்றி உயரச் செல்லும் துறை.
நான்கு சுவர்களுக்குள் ஓர் உலகம்,
எளிமையாய் வாழ்வில் உயரச் செய்யும் மின்தூக்கி!
கண்ணாடிப்பெட்டிக்குள் காலம் உறைந்தது,
ஒரே நொடியில் தளங்கள் கடந்தது.
இரும்பு நாணின் வலுவில் மேலேறி,
கனவுலகம் போல கண்முன் விரிந்தது.
சாய்ந்திடா வண்ணம் ஸ்திரமாய் நிற்கும்,
மனிதரின் சிரமத்தைக் குறைத்துவிடும்.
எழுந்து நின்றால் உச்சம் தொடும்,
மின் தூக்கி வாழ்க, வாழ்கவே!
இளவேனில் போல இதமாய் நகரும்,
எத்தனையோ வாழ்வில் உயர உதவும்.
ஒரு சில அடிகள், மாறும் கோணங்கள்,
நகர வாழ்வின் அசைவில்லா அங்கங்கள்.
சத்தம் இன்றி சாரும் ஏணி,
உள்ளே அமர்ந்தால் ஆனந்தப் பேணி.
கால்கள் நோகாது, பயணம் இலகு,
நவீன உலகின் மாபெரும் வரவு!

இ.டி. ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!