பொன்னான மாலைப் பொழுது, எங்கும் அழகு சூழ்ந்திருதே,..
மேஜை மீது ஒரு குவளை.. அமைதியாய் அது இருக்கிறதே…
பக்கத்தில் கணினி ஒன்று, உலகை இணைத்திடுதே,
ஒரு கைபேசி அருகினிலே, தொடர்பை தந்திடுதே.
பூ ஜாடி ஒன்றும் அருகே, மலர்கள் சிரித்திடுதே,
இந்த அழகிய சூழலிலே, மனம் அமைதி கொள்ளுதே.
மெல்லிய மஞ்சள் வெயில்
தூசியில் மின்னும் அழகை கண்கள் ரசிக்குதே.
எண்ணங்கள் பொங்குதே..
பூ ஜாடியின் வண்ணங்கள், மனதை கொள்ளை கொள்ளுதே,..
இயற்கையின் எழில் இங்கே, கவிதை சொல்லுதே…
இ.டி.ஹேமமாலினி