படம் பார்த்து கவி: நாற்பரப்பில்

by admin 3
11 views

நாற்பரப்பில் முப்புறமும் நீரால் சூழ்ந்திட்ட
பூமிப் பந்தின் தோற்றமே காணக்
கவின் மிகு காட்சிதான்…. அதிகப்
பரப்பில் நீர் இருப்பினும் கோளத்தின்
வெகுஜனம்  பாடு  என்னவோ தண்ணீருக்குப்
பல நேரம் திண்டாட்டம்தான்… ஏன்
எனும் கேள்வி எழுகிறதா?…அழித்தோமே
காடுகளை….எழுப்பினோமே கட்டிடங்கள் வரிசையாய்
நீர்நிலைகள் மேலே… தவறுகள் மறந்தே
பயணம் செவ்வாய்க் கிரகத்தில் நீர் தேடி…


நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!