படம் பார்த்து கவி: நிர்மல

by admin 3
19 views

நிர்மல வானம் நோக்கி பூமி
பீய்ச்சி அடிக்கும் தெளிப்பான் எதற்கோ?
ஒளிந்திருக்கும் குட்டித் தாரகைகள் காண்பதற்கா?
இரசாயன நெடியும் , வேகமும் தாங்கொணா
மேகராணியவள் கண்கள் கலங்கப் பெய்திடும் செயற்கை மழைக்கோ?மரங்கள், காடுகள்,
மழைநீர் சேகரிக்கும் ஏரிகள், குளம்,
குட்டைகள் அழிந்து ஆங்காங்கே கான்கிரீட்
கட்டிடங்கள் ஆக இயற்கையை அழித்து
இயற்கையிடமே யாசிக்கும் விந்தை மனிதர்கள்…

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!