படம் பார்த்து கவி: நிலத்திக்கு

by admin 3
22 views

நிலத்துக்கு நிலம் பருவத்துக்குப் பருவம்

நிறம் மாறும் காட்டுப் பூனையாம்

சிறுத்தைகள்… இரவில் மட்டுமே இரை

தேடிச் செல்லும் அந்தப் பெரிய

பூனையின் பகல் பொழுது வாழ்விடமோ

புகையிலை சூழ் மரங்களே… நாட்டுப்

பூனைகள் எலி வேட்டையாட இந்தக்

காட்டுப் பூனைகள் ஆடுவதோ மிருக

வேட்டையே…வேகம் அதன் பலமாம்

பலவீனமும் அதுவே எனின் என்சொல்ல?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!