படம் பார்த்து கவி: பனியில்

by admin 3
16 views

பனியில் பிறந்த வெண்மையும்
நீலமும்  கலந்த மேகமாய்
பனி உறைந்தப் பாதம்
பனி  மலைகளின் மைந்தனாய்
நிமிர்ந்த நம்பிக்கை  நடையோடு
நாசியில் உறைந்த வாசத்தோடு
உணவுத் தேடும் உள்ளம்
கோரமான  உண்மைக் கோபம்
கொண்டாலும் நெருப்பற்ற தீயாய்
கண்களில்  காதல் கனிவோடு
தீண்ட முடியாது ஆயினும்…
தாயாய்க்  குட்டியைத் தாங்கும்
ஆனந்தம் தேடும் அதனுள்
அழகிய அமைதி  தங்கும்
மனிதன்  போல் வாழும் சோகமும்  அதற்குண்டு
விண்ணை நோக்கும் அந்த வெண்ணிற உயிரை
விலங்காக எண்ணாதே விலங்குக்கும் உரிமை உண்டு

நா.பத்மாவதி
கொரட்டூர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!