படம் பார்த்து கவி: மலையோரம்

by admin 3
24 views

மலையோரம் இரயில் வண்டி
மெதுவாக அது ஓடும்
புகைவண்டி உருவாக்கும்
புகை யெல்லாம் மலையாகும்
இரயில் ஓடும் வழி மீது
தலை வைத்து படுத்துத் தான்
தாய்மொழியாம் தமிழ் மொழியை
அழியாமல் காத்தோமே
வளமாக வளர்த்தோமே 
அதுபோலே  எல்லோரும்
இனிமேலே ஒன்றாகி
இரயில் ஓடும் வழி மீது
படுத்தேனும் தடுத்தேனும்
உருவாகும் புகை யெல்லாம்
குறைத்தேனும் தடுத்தேனும்
பூமியை வளமாக வளர்போமா?
அழியாமல் காப்போமா?

சர். கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!