இழப்புகள் கண்டு கலங்காதே பேதை
மனமே.. ஆக்கவும் முடியா அழியாத்
தன்மை கொண்ட ஆற்றல் போல்தான்
ஒன்றின் இழப்பு பிறிதொன்றின் ஆக்கம்
இறைவன் போடும் புதிர்கள் அறியோம்
நாமே.. கொடுப்பது அவனே கெடுப்பதூஉம்
அவனே.. இழப்புகள் கடந்து ஒழுக்கத்தின்
வழி எய்துவோம் மேன்மையான வாழ்வுதனை
அவனன்றி அசையாது ஒரு அணுவும்
நம்பினோர் கெடுவதில்லை நான்மறைத் தீர்ப்பன்றோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: இழப்புகள்
previous post