ஊடலின் வலிமை உலகம் அறியும்
உள்ளத்தின் உணர்வுகள் ஊடலில் புரியும்
கல்லுண்ட மயக்கமாய் காதலி விலகிட
கண்ணசைவின் அழைப்புக்கு காதலே ஏங்கிடும்!
உரிமையாய் கோபிக்க ஊடலும் உதவிடும்
குழந்தையாய் சிணுங்கிட காதலும் நிறைந்திடும்
ஊடலின் முடிவில் கூடலே வெல்லும்
புரியாமல் பிரிந்தால் வீணாகச் செல்லும்!!
பூமலர்