ஏர் பூட்டி நிலம் உழுது
நீர் பாச்சி நாற்று நட்டு
வயலாக்கி அழகு பார்த்து
விளைந்த புது நெல்
அரிசி கொண்டு பொங்கல் வைக்க
புது பானை வாங்கி வந்து
வீட்டுக்கு வெள்ளை அடித்து மாட்டு கொம்புக்கு வண்ணம் பூசி
விளைவிக்க உதவிய ஐம்பூதங்களுக்கும்
நன்றி சொல்ல பொங்கல் வைத்து
வணங்கிய விவசாயிகளை வணங்க
வாழ்நாள் முழுவதும் விடுப்பில்லாமல்
வேலை சொய்யும் விவசாயியை வணங்க
விடுமுறை கொடுக்கப்படுகிறது நமக்கு
– அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: ஏர்
previous post