வாரம் நாலு கவி: களவாடப்பட்ட

by admin 3
38 views

களவாடப்பட்ட வாழ்க்கையால்
விலங்கிடப்படா கைதியாக
மகிழ்ச்சித் தேடலில்
தேங்கிப் போய்
ஏக்கத்துடன் கன்னமதில்
கைகள் பதித்துக்
கலக்கமது மனச்சுமையில்
நிகழ்காலந்தொறும் நீடித்து
ஆண்டுக்கொரு நாள்
பண்டிகையைக் கொண்டாட
மனம் படைத்த
மகான்களின் வருகையால்
அன்றைக்கு மட்டும்
பொய் உவகை
முகமறியா உறவுகளுடன்
உலகையே மறக்க
அனாதையெனும் வார்த்தை
தற்செயலாக மறைக்கப்பட
பீனிக்ஸ் பறவையென
மீளுருவாக்கமாய்த் துள்ளலுடன் !

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!