தவழும் குழந்தைக்கோ தாய்மை படைக்கும்
சங்கீதம்.. அதரங்கள் உலா வந்து
அளிக்கும் இன்னிசை விருந்தாம் முத்தம்
காமுறும் காதல் மனங்கள் பதித்துச்
செல்லும் அன்பின் அச்சாரம்.. முத்தத்தில்
வகை பலவாம்… பறக்கும் முத்தம்
சத்தமின்றி அன்பு கடத்தும் ஊடகமன்றோ?
பொதுவெளியில் பரிமாறும் முகம் சுளிக்கச் செய்திடும் முத்தங்கள் சில உணர்வரோ
பிறரறிய நாடகங்கள் நடத்தும் ஆசாரக்கள்ளர்கள்!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: தவழும்
previous post