படம் பார்த்து கவி: சிறு

by admin 3
73 views

சிறு குழந்தையின் பிஞ்சுக் கைகளில்,
குட்டி ஆந்தை ஒன்று அமர்ந்திருக்க,
அழகிய கண்கள் ஒன்றையொன்று நோக்க,
பாசப் பிணைப்பில் வியப்புடன் பார்க்கின்றன.
எளிமையும், தூய்மையும் கலந்த காட்சி,
இதயங்களை அள்ளும் ஒரு நிமிடம்,
இயற்கையின் விந்தை ஒரு பிஞ்சுயிரின் கையில்,
அமைதியும் அன்பும் தவழும் அந்த வேளை…

இ.டி ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!