வாரம் நாலு கவி: உடல் வலி

by admin 3
119 views

உடல் வலி தாங்கி மன வலி கடந்து
ஈரைந்து மாதம் கருவில் சுமந்து
வலியின் உச்சம் கண்டது உடல்
உடலை கிழித்துக்கொண்டு வந்தது உயிர்
போதும் ஒரு குழந்தை, வேண்டாம்
மறு குழந்தை என்று மனம் உறுதியேற்க
அழுகை குரல் கேட்டு அமுதம் சுரந்தது
குழந்தையின் பசியாற்ற அனைத்தும் மறந்தது
நேரம் முழுவதும் சேயே சுருட்டிக்கொள்ள
குழந்தையின் மழலையில் வைராக்கியம் மறந்தாள்


– அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!