ஆறுக்கு திருநீறும் ஐம்பதுக்கு பூவாகும் சமத்துவமும்
பணப் பகடையில் வெட்டுப்பட்டு வீழும் அறமும்
போக்சோவுக்கும் முன்னூற்றி இரண்டுக்கும் திருத்த மசோதாயியற்றி
தலைக்கு தலை விலைபேசும் சட்டத்தின் சத்தியப்பிரமாணமும்
பத்திரத்தால் பாசப்பசை கொள்ளும் பண்பான புத்திரர்களும்
பேரம் பேசும் அதிகாரிகளின் தொழில் பக்தியும்
கடைசிவரை கடைசியிலேயே
நின்று கண் சுருக்கிப்
பார்க்க வைக்கும் கருவறைக் கடவுளின் கருணையுமென
இதுக்கிணை எதுவென உயர்த்தி வைத்த உன்னதங்கள்
விலைக்கு மதிப்பாகி தன் மதிப்பிழந்து போனதுவோ!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: ஆறுக்கு
previous post