வாரம் நாலு கவி: இரவில்

by admin 3
19 views

இரவில் தோன்றும்
நிலவின் ஒளியிலும்
செயற்கையாக தோற்றுவிக்கும்
விறகு நெருப்பொளியிலும்
வாழ்ந்த மக்கள்
எண்ணெய் விளக்கு
மண்ணெண்ணெய் விளக்கு
என்று மாறியவர்களை
இரவிலும் பகலை
காணலாம் என்று
தோன்றியது மின்சாரம்
நம் தேவைகள் அதிகரிக்க
அதன் சேவைகளும் பெருகியது
தங்கம் போல் மின்சார விலையும்
ஏறிக்கொண்டே சென்றது
காலையில் கைதொடும் செல்பேசி முதல்
இரவில் பல் துலக்கும் ப்ரஷ் வரை
மின்சாரத்தின் அவசியம் அத்தியாவசியம்
தொட்டதும் ஷாக் அடிக்கும் மின்சக்தியை
ஆக்க சக்தியாக மாற்றும்
பல மின் சாதனங்கள்
வேகமாக சுழலும் காலச் சக்கரத்தில்
நம்மை வேகமாக பயணிக்க வைக்க
மின் சாதனங்கள் அவசியம்
அதற்கு மின்சாரமும் அவசியம்

— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!