இல்லாமை தேடல் தரும்
இயலாமை சோர்வை தரும்
முயலாமை சோம்பல் தரும்
கல்லாமை அழிவை தரும்
பொறாமை வீழ்ச்சி தரும்
அஞ்சாமை ஏற்றம் தரும்
ஆற்றாமை விரக்தி தரும்
எல்லா ஆமையையும் விரட்டிவிட்டு
அருகில் இல்லாமலேயே அடுத்த
தலைமுறைக்கு அறிவை கடத்தும்
ஆமை போல் நிதானமாக
உலகின் போக்கிலேயே சென்று
அமைதியாக பல ஆண்டுகள்
உயர்வாய் வாழ்ந்திடுவோம்
அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: இல்லாமை
previous post