வாரம் நாலு கவி: உணர்வின்

by admin 3
7 views

உணர்வின் ஓசைக்கு
உருவம் தந்து
பிறந்த நிலத்தின்
பிரயாணிகளைப் பிணைத்து
நானென்பதை நாமென்றாக்கிய முதல் மந்திரம்
புலம்பெயரும் போதும்
ஒருபிடி மண்ணால்
குலக்கடவுளை குடியேற்றி
காலத்துக்கும் காத்த
தலைமுறையின் வழிவந்த
சிறு தளிர்கள்
புலனக்காலத்தில் விமானக்கலத்தில்
மண்விட்டு மண்ணுக்கு
விண்ணில் பறந்தாலும்
கருமொழியின் உயிர்வேரின்
சிறுதுளியை உதிரஞ்சுமக்குமாயின்
ஆயிரமாயிரமாண்டாயினும்
அழிவற்ற அடையாளத்தின் தாயெனும் சிறப்பு சிரம்தாழாதே!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!