வாரம் நாலு கவி: உள்ளத்தூதை

by admin 3
31 views

உள்ளத்தூதை ஏந்திடும் வெள்ளைத்தூதனவன்
வெகுளியாய்
சுமந்து சென்றான்
ஈரிதயக்கூட்டினுள்
இசைமீட்டும் சந்தங்களையும்
கண்ணீரில் வரைந்த காவியங்களையும்
பதிலிற்கு பதிலாய் முத்தங்களையும்
பதற்றத்தில் சிதறிய மனமுத்துக்களையும்
பதுங்கிப் பதுங்கி கரைசேர்த்தவன்
பத்திரமாய்
பழுப்பேறிக் கிடக்கிறான்
சிலரின் கடையிதழ் ஆனந்தமாய்
சிலரின் கடைவிழிக் கண்ணீராய்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!