வாரம் நாலு கவி: ஊசி

by admin 3
8 views


ஊசி முனையில்
புன்னகைத்த நூல்
ஆடைகளின் உலகத்தைத்
தையலால் எழுப்பி
கானகத்தில் மொழியறியாப்
பகுத்தறிவாளரின் சிந்தனைக்குள்
ஆள் பாதி
ஆடை பாதியென
புரிந்துகொள்ளத் தலைப்பட்டு
நாள் முதல்
உதிரத்துடன் கலந்திருக்கும்
தாய்மொழியின் வாசனைதனை
மனிதனுக்குணர்த்திய மகுடமாய்
மாறிப் போய்
சைகைக்குக் கையசைச்து
எழுத்துக்களைக் கோர்த்து
பேச்செனும் நுழைவாயிலமைத்ததில்
மொழி துளிரிட
தாய்மொழிச் சாரலெனும்
புதுமழை பொழிந்தது!


ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!