வாரம் நாலு கவி: ஒரு

by admin 3
32 views

ஒரு கன்னத்தில் அறைந்தால் அதுசமயம்
மறு கன்னத்தைக் காட்டுவது பழமை
ஒரு கன்னத்தில் அறைந்தால் அதுசமயம்
ஒரு மனிதரைக் கொல்லும் காலமிது
வன்முறை நீக்கமற நிறைந்த காலம்
நன்முறை கற்காததன் நடைமுறைக் கோலம்
கன்னத்தில் கைவைத்துக் கலங்குவது அந்தக் காலம்
எண்ணத்தில் தற்கொலை தோன்றி
ஈடேற்றுவது இக்காலம்
தன்னம்பிக்கையால் சவால்களை எதிர்கொளும் நேர்வு
நன்னம்பிக்கை ஈன்றோர் கற்பித்தலே தீர்வு

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!