வாரம் நாலு கவி: கடவுளின்

by admin 3
29 views

கடவுளின் துகளாய் கரு சேர்ந்து
கவின் மொட்டாய் பிறை நிலவாய்
ஒவ்வோர் அணுவாய்
அருவத்திலிருந்து உருவேற்று
உன்னைக் காண உலகைக் காண
இருதயம் பெற்று
இசையும் பெற்று
அகத்தை அகமகிழ்த்த
ஆசையாய் காத்திருந்தயெனை
கருணையின்றி கருவிலிருந்து
பிய்த்தெரிந்தாயே தாயே
எண்ணக் கழிவிற்கு
என்னைக் கரைத்தாயோ
குற்றப்பத்திரிக்கை வாசிக்கவா
சுயநியாயம் கேட்கவாவென்றறியேன்
வேண்டுதலின் வேண்டாக்
கழிவாய் கிடக்கின்றதோ
இறைவனின் நீதிமன்றத்தில்
எங்களின் முறையீடும்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!