வாரம் நாலு கவி: கன்னியவள்

by admin 3
34 views

கன்னியவள் விழியோரப் பார்வைதனில் சிலிர்க்கும்
காளை நெஞ்சங்கள் களித்துக் கூடிப்
பின் கழித்தே செல்வதனால் பிறக்கும்
சொல்லொணா வேதனை ஒரு புறமிருக்க
கன்னி கழியாமலே சூடிய ‘முதிர்கன்னி’
பட்டம் கொடுக்கும் தாங்கொணாத் தவிப்பு
ஈனும் வலி கொடிதன்றோ..மங்கையராய்ப்
பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமாம்
சொன்னவனுக்கென்ன தெரியும் இப்பூவுலகில் கழிந்தும்
கழியாமலும்  கன்னிகைகள் எதிர்கொள்ளும் அவலங்கள்?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!