கன்னியவள் விழியோரப் பார்வைதனில் சிலிர்க்கும்
காளை நெஞ்சங்கள் களித்துக் கூடிப்
பின் கழித்தே செல்வதனால் பிறக்கும்
சொல்லொணா வேதனை ஒரு புறமிருக்க
கன்னி கழியாமலே சூடிய ‘முதிர்கன்னி’
பட்டம் கொடுக்கும் தாங்கொணாத் தவிப்பு
ஈனும் வலி கொடிதன்றோ..மங்கையராய்ப்
பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமாம்
சொன்னவனுக்கென்ன தெரியும் இப்பூவுலகில் கழிந்தும்
கழியாமலும் கன்னிகைகள் எதிர்கொள்ளும் அவலங்கள்?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: கன்னியவள்
previous post