களவாடப்பட்ட வாழ்க்கையால்
விலங்கிடப்படா கைதியாக
மகிழ்ச்சித் தேடலில்
தேங்கிப் போய்
ஏக்கத்துடன் கன்னமதில்
கைகள் பதித்துக்
கலக்கமது மனச்சுமையில்
நிகழ்காலந்தொறும் நீடித்து
ஆண்டுக்கொரு நாள்
பண்டிகையைக் கொண்டாட
மனம் படைத்த
மகான்களின் வருகையால்
அன்றைக்கு மட்டும்
பொய் உவகை
முகமறியா உறவுகளுடன்
உலகையே மறக்க
அனாதையெனும் வார்த்தை
தற்செயலாக மறைக்கப்பட
பீனிக்ஸ் பறவையென
மீளுருவாக்கமாய்த் துள்ளலுடன் !
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: களவாடப்பட்ட
previous post