காட்டாற்று வெள்ளமென
விஞ்ஞான வளர்ச்சி
சுழன்று கொண்டிருக்கிறது
அதன் பின்னாலுலகம்
தலைகுனிந்து விரல்களசைய
தனக்குத்தானே புன்னகைக்க
சைகை மொழிக்குத்
திரும்பியதுபோலொரு பிரம்மை
முகங்களெல்லாம் முகமறியா
முகங்களாகிப் போய்
ஏறிட்டுப் பார்க்கக்கூட
விருப்பமில்லாமல் நிற்க
மனிதனை மனிதனே
இழந்து நிற்கும்
கானல் காட்சியெனும்
பிம்பம் தோன்ற
அருங்காட்சியகத்தில் உறவுப்
பெயர்களெல்லாம் ஆவணமாகி
இழப்பின் சுவடுகளைச்
சேமித்து நின்றன!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: காட்டாற்று
previous post