வாரம் நாலு கவி: காட்டாற்று

by admin 3
37 views

காட்டாற்று வெள்ளமென
விஞ்ஞான வளர்ச்சி
சுழன்று கொண்டிருக்கிறது
அதன் பின்னாலுலகம்
தலைகுனிந்து விரல்களசைய
தனக்குத்தானே புன்னகைக்க
சைகை மொழிக்குத்
திரும்பியதுபோலொரு பிரம்மை
முகங்களெல்லாம் முகமறியா
முகங்களாகிப் போய்
ஏறிட்டுப் பார்க்கக்கூட
விருப்பமில்லாமல் நிற்க
மனிதனை மனிதனே
இழந்து நிற்கும்
கானல் காட்சியெனும்
பிம்பம் தோன்ற
அருங்காட்சியகத்தில் உறவுப்
பெயர்களெல்லாம் ஆவணமாகி
இழப்பின் சுவடுகளைச்
சேமித்து நின்றன!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!