வாரம் நாலு கவி: காலை

by admin 3
25 views

காலைச் சூரியனைத் தழுவும் மலர்கள்
மலரின் இலையில் மெல்லிய மழைத்துளி
மழை இடையே விழும் வானவில்
வானவில் வண்ணமாய் உன் அழகு
அழகு கன்னத்தில் என் பார்வை
பார்வை எழுதிய கவிதை ஓவியம்
ஓவிய சுருக்கத்தில் சின்ன சிரிப்பு
சிரிக்கும் சாயலில் மழை  ராகம்
ராகம் பாடியே மகிழ்ச்சி மலர
மலர்ந்த கன்னத்தில் விழுந்த
துளி
துளிர்த்த நாணத்தின்  சிவப்பான கன்னங்கள்
கன்னங்கள்….
காதலின் பரிமாணங்களைப் பேசும்  கவிதையானதே!
என் கவிதை  கொள்ளும்
அழகின்  அடையாளங்களே!


நா. பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!