வாரம் நாலு கவி: சினத்தின்

by admin 3
66 views

சினத்தின் சீற்றத்தையும் அன்பின் முத்தத்தையும்
மடந்தையில் முகாமிடும்
முத்துப் பருக்களையும்
மன்னவன் கொஞ்சலில் மலர்ந்திடும் மஞ்சளையும்
உள்மனம் சீறிட கனன்றிடும் செம்மையையும்
நம்பிக்கை உடைந்திட உதிர்ந்திடும் உவர்ப்பையும்
மணிவயிறு நிரம்பிட
மணந்திடும் காப்பையும்
மழலையின் மலரிதழ்
பன்னீர்க் குளுமையையும்
ஒட்டித் தழுவிடும்
ரெட்டைக் கோளம்
சுருங்கிச் சொல்லிடுமே நெருங்கிடும் எல்லையை!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!