வாரம் நாலு கவி: சுழித்தோட

by admin 3
12 views

சுழித்தோட மறுத்து
மண்டியிட்டு நிற்க
நம்மை மக்காக்கி
மக்காத இடத்தில்
மங்காத பொருளாய்
பூரணமாய் பூரிப்புடன்
பூமிப் பந்தில்
புண்ணியத் தலமமைத்து
வற்றா நதிகளையும்
சுற்றமாய்ச் சுற்றிவளைக்க
வலையமைத்துத் தூண்டிலிட
சிக்காத மீன்களில்லை
பல்லுருவம் பெற்று
விற்பனைக்குவாராப் பொருட்களில்லை
வியாபாரமெல்லாம் வியாபித்து
நிற்கத் தூண்டாவிளக்கானாய்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!