சூரியனின் வேகத்தை உச்சிவெயிலென
நாமம் சூட்டுகிறாய் அன்பே
அலைகள் வேகம் கொண்டால்
சுனாமி என்கிறாய் ஆருயிரே
இசையின் உச்சத்தை இனியகீதமென
கேட்டு இன்புற்று மகிழ்கின்றாய்
வார்த்தைகள் வேகம் கொள்ளும்போது
கோபம் என்கிறாய் அன்பே
எழுதுகோல் வேகத்தைக் கிறுக்கலென்று
கூறாமல் கவிதையென்று பெயரிடுபோதும்
அற்புதராசா பிரார்த்தனா
ஈழம்
வாரம் நாலு கவி: சூரியனின்
previous post