திருவிழாவின் மறுபெயரே இங்கு கொண்டாட்டம்
தேடி வரும் பண்டிகையால்
தினந்தோறும்..
அன்பை போதித்த
அருள் மகான்களோடு …
ஆலய தெய்வங்களின்
ஆற்றல் நிலைப்பாட்டில்
கல்யாணம்,
காதணி விழா .நிகழ்வுகளில் …
களிப்பூட்டும் பிறந்தநாள், பேர் சூட்டுவதில் ..
பதவி உயர்வுக்கு
போதை உபசரிப்பில்…
பயிர்த்தொழில் சிறக்க
பகலவனை நினைவூட்டுவதில்..
காசு, பணம் இருந்தால்
மட்டுமா?
கடன் கொடுப்பதும்
இப்போது கொண்டாட்டமே…
“சோழா” புகழேந்தி