வாரம் நாலு கவி: நீல

by admin 3
41 views

நீல வானம்
நீண்ட தூரத்தில்
இருளைப் பிழிந்து
அச்சத்தைத் தர
விழிகளிரண்டும் திறக்க
மறுத்துப் போராட
யாரேனும் பொய்யென்று
சொல்ல மாட்டார்களா
மனமது ஏங்கித்
தவித்துக் கலங்க
போகாத கோவிலில்லை
வேண்டாத தெய்வமில்லை
அத்தனையும் கனவாகப்
போய் விடாதா
கதிரவன் கண்ணைத்
திறக்க அழைப்புவிட
விழித்த பின்தான்
அத்தனையும் கனவென்பது
ஆண் கன்னியாவது
பொருளற்ற வாழ்க்கை!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!