வாரம் நாலு கவி: படைத்தவள்

by admin 3
63 views

படைத்தவள் பனிவயிற்றில்
பவிசாய் பவனிவந்து
பதினெட்டுப்பத்து கோணத்தில்
மானாய் குதித்து
காற்றைக் கிறங்கடித்து
கண்டம்வரை இரைசேர
களிப்பொன்றே கதியென்று கவலையின்றி கடந்தநாட்கள்
கானல்நீராய் தலைதாண்டி
உடற்தாண்டி வால்தாண்டி
வற்றிப்போய் வஞ்சிக்க
அகதியாக மறுத்து
கோட்டுத்தழும்பு கொண்ட
அவள் வயிற்றில்
கருவாடாகக் கிடக்கின்றன
ஏரி மீன்கள்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!