வாரம் நாலு கவி: பட்டுப்பூவாய்

by admin 3
56 views

பட்டுப்பூவாய் பூவினிதழாய் இதழினும் மென்மையாய்
பட்டாம்பூச்சியென சுற்றியே திரிந்திடும் சிட்டுச்சிறுமியுன்
சின்ன சிரிப்பில் சிவக்கும்  கன்னமும்
வண்ண வண்ணமாய் வானவில் போலாகவே
என்னென்று சொல்லுவேன் என் எண்ணமெல்லாமும்
உன்னன்பு உடனிருப்பதால் உள்ளமும் உவகையாகுதே
கன்னத்தோடு கன்னம் தேய்க்கும் மழலையுந்தன்
கனிந்த முத்தம் நித்தமெனக்கு கிடைத்திடவே
யுத்தம் கூட பல செய்திடுவேன்
சித்தமாகுமோ
நித்தமென் கன்னம் தேய்ப்பா(யோ)யா..!

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!