வாரம் நாலு கவி: பருவ

by admin 3
9 views

பருவ மாற்றத்திற்கு விடை பெற்ற நான்
பக்குவமாய் வழியனுப்பிவிட்டதால்
கவலை வலைக்குள் அகப்படவில்லை
மீண்டெழும் நம்பிக்கையால்
உதிர்ந்ததை சேர்க்க
முடியாவிட்டாலும்
நுண்ணறிவால் புதுப்பிக்க முடியுமென்ற நினைப்பினால்
காத்திருந்தேன்
கிளைக்கு வலு சேர்ப்பதுதான்
முதல் வேலை
உள்ளிருந்த பசுமைத் தளிர்கள்
தாலாட்டலில் வெளிப்பட
உடல் சிலிர்த்துப்  போனேன்
அறிவின் மறுபக்கம்
என் பக்கம் என்பதறிந்தேன்
பச்சையமாய்ச் சூழ்ந்தேன்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!